Friday, October 29, 2010

கேரள பஞ்சாயத்து தேர்தலில் சிறையில் இருந்தபடி வென்ற வேட்பாளர்

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடுபுழா பேராசிரியரை வெட்டிய வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர், பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தொடுபுழா கல்லூரி பேராசிரியர் ஜோசப்பை வெட்டிய வழக்கில் அனஷ் என்பவர் கைது செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று வாழக்குலம் பஞ்சாயத்து தேர்தலில் சமூக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநா யக கட்சி வேட்பாளரை 1902 வாக்குகள் வித்தியாசத்தில் அனஷ் தோற்கடித்தார்.


நன்றி: தினகரன்

வெற்றிப் பெற்ற எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள்

கேரள மாநிலத்தில் முதன்முறையாக தேர்தலில் பங்கேற்ற சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் நான்கு நகரசபை வார்டுகளிலும், ஒரு ப்ளாக் பஞ்சாயத்திலும், ஏழு கிராமப் பஞ்சாயத்துகளிலும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

பல்வேறு கட்சிகளைக் கூட்டணியில் உட்படுத்தி தேர்தல் களத்தில் குதித்த இடதுசாரி மற்றும் காங்கிரஸ் முன்னணியினருக்கு மத்தியில் தன்னந்தனியாக போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ தனது தேர்தல் பிரவேசத்தை கம்பீரமாக்கியது.

வெற்றிப்பெற்ற இடங்களைத் தவிர 70க்கும் மேற்பட்ட வார்டுகளில் நிர்ணய சக்தி என்பதையும் எஸ்.டி.பி.ஐ நிரூபித்துள்ளது.

பத்தணம் திட்டா நகரசபையில் குலசேகரபதி வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் எஸ்.ஷைலஜா 244 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.

தொடுப்புழா நகரசபையில் கீரிக்கோடு வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஆசிரியை சுபைதா 310 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.



சொர்ணூர் நகரசபையில் முனிசிபல் வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பீனா 270 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.


கண்ணூர் நகரசபையில் கஸனாக்கோட்டை தெற்கு வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸுஃபீரா 325 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.


எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் 1903 வாக்குகளின் பெரும்பான்மையோடு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பேராசிரியர் அனஸ் வெற்றிப் பெற்றுள்ளார்.


முவாற்றுப்புழா பேராசிரியரின் கை வெட்டி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர் அனஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெற்றிப்பெற்ற இதர வேட்பாளர்கள் வருமாறு:


எர்ணாகுளம் கடுங்கல்லசூர் பஞ்சாயத்து வார்டு-எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸீனத் ஜலீல் வெற்றி

ஈராட்டுப்பேட்டை பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் என்.என்.பினு நாராயணன் வெற்றி

கொல்லம் குலசேகரபுரம் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ ஆதரவுப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் எ.நாஸர் வெற்றி

கொல்லம் போருவழி பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஆமினா வெற்றி

திருச்சூர் சுவனூர் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஷாமிலா கபீர் வெற்றி

காஸர்கோடு மஞ்சேஷ்வரம் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் மைமூனா வெற்றி

மலப்புரம் வேங்கர பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் கதீஜா ஷம்ஸ் வெற்றி

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்